text
stringlengths
1
43.3k
words
int64
1
4.33k
நல்லவனை நல்லவன் பாராட்ட வேண்டும்.
4
கொள்கைக்காக வாழ்கிறவனை கொள்கைக்காக வாழ்கிறவர்கள் பாராட்டியாக வேண்டும்.
6
யார் யாரை மதிக்கிறார்களோ அவர்களைப் பாராட்ட வேண்டும்.
6
யாரால் மதிக்கப்படுகிறார்களோ அவர்களைப் பாராட்டியாக வேண்டும்.
5
இந்தநிலை மாறும்போது அருவறுப்பான சூழ்நிலை ஏற்படுகிறது.
5
நண்பர் சிவாஜி கணேசன் ஒரு கட்சியில் தி.மு.க.
6
இருந்து விட்டுப்போனவர்.
2
அவருடைய கட்டபொம்மன் நாடகத்திற்கு எங்கள் தலைவர் அண்ணா போய் எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்தினார்.
11
சிவாஜி நம்மை விட்டுப்போய்விட்டாரே என்ற எண்ணத்திற்கே அங்கு இடமில்லை.
7
அதுதான் நல்ல பண்பு.
3
காமராஜர் என்னை விட்டுப்போகவில்லை.
3
நான் அவரைவிட்டு வந்தவன் எம்.ஜி.ஆர்.
4
ஆரம்பத்தில் காங்கிரஸில் இருந்தவர் நான் காமராஜரைப் பாராட்டிப் பேச வந்ததற்கு வேறு உள் காரணங்கள் தேடினாலும் கிடைக்காது.
13
காமராஜர் வாழ்ந்தால் யாருக்கு லாபம்?
4
வாழாமல் இருந்தால் யாருக்கு லாபம்?
4
காமராஜர் ஒரு ஏழையாக வளர்ந்திருக்கிறார்.
4
யாரும் மேடையில் ஏறி அவர் சொத்து சேர்த்திருக்கிறார் என்று சொல்ல முடியாது.
9
தன் தாயை ஈன்ற இந்த நாட்டின் கடமைகளை விடாமல் செய்து வருகிறார்.
9
காமராஜரைப் புகழ்வதில் யாருக்கு நஷ்டம்?
4
நான் ஒரு கலைஞன் தி.மு.க.
4
பொதுக்குழு உறுப்பினர்.
2
அண்ணா வழியில் நடப்பவன்.
3
அவர் கொள்கை எனது உயிர்.
4
அப்படிப்பட்ட நான் காமராஜரையும் அய்யாவையும் பெரியார் பாராட்டாமல் வேறுயாரைப் பாராட்ட முடியும்?
9
இதே மேடையில் தான் பெரியாரைப் பாராட்டிப் பேசினேன்.
6
நமது தலைவர் காமராஜரைப் பாராட்டிப் பேசுகிறேன்.
5
நமது தலைவர் என்று நான் சொல்வது மக்கள் ஏற்ற தலைவர் அவர்.
9
அதனால் நமது தலைவர் என்று சொல்கிறேன்.
5
காமராஜர் இரவுபகல் பாராமல் பாடுபடுகிறார்.
4
அவரை ஏன் பாராட்டக் கூடாது?
4
என் கொள்கையை நான் கடைப்பிடிப்பதிலும் ஏன் இந்த இலக்கணத்தை பின்பற்றக்கூடாது?
8
எங்கெங்கு நல்லது இருந்தாலும் அதனை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
7
ஏழைகளுக்கும் பின்தங்கிய மக்களுக்கும் உயர்ந்த நிலையை உருவாக்கித்தந்தவர் காமராஜர்.
7
ஏழைகளை வாழவைக்க வேண்டும் என்று காமராஜர் சொல்கிறார்.
6
நாம் அதைத்தான் சொல்கிறேன்.
3
என் கட்சியும் அதைத்தான் சொல்கிறது.
4
அதனால் அவருக்கு மாலையிடுகிறேன்.
3
பண்புள்ளவன் பகுத்தறிவுள்ளவன் அண்ணா வழியில் நடப்பவன் மாலை இடுகிறான்.
7
காமராஜர் நேரில் இருந்திருந்தால் மாலைகளைக் குவித்திருப்பேன்.
5
காமராஜர் வருவார் என்று சால்வை வாங்கி வைந்திருந்தார் ஏழைகளின் நல்வாழ்வுக்காக காமராஜர் தன்னையே தியாகம் செய்து கொண்டவர் அவருடைய லட்சியத்தில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்கமுடியாது.
19
அவர் மேற்கொண்டுள்ள லட்சியம்தான் நம்முடைய வழி.
5
நான் நாடோடி மன்னன் படத்தில் சொன்ன கருத்துக்கள் போட்ட சட்டங்கள் அனைத்தையும் காமராஜர் அமல்படுத்தி வருகிறார்.
12
எல்லோருக்கும் இலவச கல்வி என்றேன்.
4
அது நடந்து வருகிறது.
3
உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்குத்தான் எல்லா வசதியும் என்று இருந்த நிலைமையை மாற்றி தாழ்ந்த வகுப்பினருக்கும் எல்லாவற்றிலும் எங்கும் முதலிடம் என்று அமைத்தவர் காமராஜர்.
17
இங்கு காமராஜரை சந்தனக் கட்டைக்கு ஒப்பிட்டுப் பேசினார்கள்.
6
நான் இதை ஏற்க விரும்பவில்லை.
4
ஏனென்றால் சந்தனக் கட்டையை அரைக்க அரைக்க மணம் வீசுவது உண்மை.
8
ஆனால் அது தேய்ந்து மறைந்து விடுகிறது.
5
ஆகவே சந்தனக் கட்டைக்கு ஒப்பிட்டுப் பேசுவது முறையல்ல சரியல்ல.
7
என்னைப் பொருத்தவரை காமராஜரை நான் உதயசூரியனுக்கு ஒப்பிடுகிறேன்.
6
சூரியன் கிழக்கிலிருந்து உதிர்த்து மேற்கில் மறைவதுபோல் தோன்றுகிறது.
6
உண்மையில் அது மறையவில்லை.
3
இருந்த இடத்தில்தான் இருக்கிறது.
3
அதுபோல காமராஜரின் புகழ் தொண்டு உதயசூரியனைப்போல் பிரகாசித்துக்கொண்டு இருக்கிறது.
7
நான் இதுவரை எந்தவித தியாகமும் செய்யவில்லை.
5
அப்படிப்பட்ட சந்தர்ப்பமும் ஏற்படவில்லை.
3
ஆனால் தியாகிகளின் கூட்டத்தில் கலந்துக் கொண்டு தியாகிகளால் பாராட்டுவதை கேட்கும்போது எனக்குப் பெருமையும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது.
12
காமராஜர் அவர்கள் நூறு ஆண்டுகள் வாழ்ந்து நாட்டிற்குச் சேவை செய்ய வேண்டும்.
9
மக்களின் கவலைகளைப் போக்கி நல்வாழ்வைக் கொடுக்கவேண்டும்.
5
கல்யாண வீடு போல நாம் இங்கே சிரித்துப் பேசிக்கொண்டு இருக்கிறோம்.
8
அதோடு நாம் சிந்திக்கவேண்டும்.
3
அதற்கு நாம் காமராஜரை வணங்கித்தான் ஆகவேண்டும்.
5
மக்களை ஒற்றுமைப்படுத்தும் காமராஜர் நீடூழி வாழவேண்டும்.
5
ஜனநாயக சோஷலிசம் என்று காமராஜர் சொல்கிறார்.
5
இது சரியா?
2
என்று சிலர் கேட்கிறார்கள்.
3
சர்வாதிகார ஆட்சி வேறு பரம்பரையாக நாட்டை ஆள்வது வேறு ஜனநாயகத்தில் மக்கள் விருப்பத்துடன் அமல்படுத்தப்படுவது சோஷலிசம் பேதமற்ற சமுதாயம் காண்பதுதான் அதன் அடிப்படை.
17
ராஜாஜி இங்கே முதல் அமைச்சராக இருந்தபோது குலக்கல்வி திட்டத்தைக் கொண்டு வந்தார்.
9
அதனை தி.மு.க.கழகம் எதிர்த்தது.
3
காமராஜர் முதல் அமைச்சராக வந்தவுடனேயே மாற்றப்பட்டது.
5
காங்கிரசின் திட்டத்தை அதே காங்கிரஸ்காரர் மாற்றினார்.
5
எப்படி மாறியது?
2
ஒரு மனிதன் நல்லவனாக இருந்தால் கட்சிக் கொள்கையும் மாறுகிறது.
7
அதற்கு எடுத்துக் காட்டு காமராஜர்.
4
இப்படிப்பட்டவரைப் போற்றாமல் தி.மு.க.கழகத்தில் எனக்கு வேறு என்ன வேலை இருக்க முடியும்.
9
தி.மு.க.வின் லட்சியங்களைக் காமராஜர் நிறைவேற்ற விரும்புகிறார்.
5
அதற்குக் காலதாமதம் ஆகலாம்.
3
காமராஜர் என் தலைவர்.
3
அண்ணா என் வழிகாட்டி.
3
என்னைவிடச் சிறந்தவர்களை என் தலைவர்களாக ஏற்கிறேன்.
5
ஒருசமயம் காமராஜரை நேரில் சந்தித்து எங்கள் குறைகளை அவரிடம் ஒரு மணி நேரம் விளக்கிப் பேசினேன்.
12
அப்போது அவரது நல்ல குணத்தைக் கண்டேன்.
5
எண்ணி எண்ணிப் பூரித்தேன்.
3
என்னை அவர் தன்பக்கம் இழுக்கவோ அவமானப்படுத்தவோ இல்லை.
6
மாநகராட்சித் தேர்தலின்போது அவர் வேட்டைக்காரன் வருகிறான் ஏமாந்து விடாதீர்கள் என்று ஏதேதோ பேசினார்.
10
நாம் பதிலுக்கு ஏதேதோ பேசினேன்.
4
அது அரசியல் தனிப்பட்ட முறையில் அவர் நல்லவர் பெரிய முதலமைச்சர் பதவியையே தூக்கி எறிந்தவர்.
11
தொண்டராய் தோழனாய் இருந்து மக்கள் சேவை செய்யமுடியும் என்று கருதி பதவியைத் துறந்தார்.
10
சாதாரண கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவரும் இதைப் பின்பற்ற வேண்டும்.
7
எம்.ஜி.ஆர்.
1
சிகப்பு நான் கறுப்பு என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முகவை ராஜமாணிக்கம் குறிப்பிட்டார்.
10
மனிதனுக்கு இந்த இரண்டு ரத்தமும் தேவை.
5
ஏதாவது ஒன்று அதிகமாகி விட்டால் வியாதிதான்.
5
கறுப்பு என்றால் களங்கம் அல்ல.
4
இரண்டும் சேர்ந்தால்தான் ஜனநாயக சோஷலிசம் மலரும் எம்.ஜி.ஆர் இப்படிப்பேசிய அடுத்த சில நாட்களில் அரசியல் சூழல்பரபரப்பானது.
12
திமுகவின் பரமஎதிரியான காங்கிரஸ் தலைவரை புகழ்ந்துபேசியதோடு அவரை எப்படி தலைவர் என்று சொல்லலாம்.
10
அண்ணாவை வழிகாட்டி என சிறுமைப்படுத்திவிட்டார் என திமுகவில் ஒரு குழு பிரச்னை கிளப்பியது.
10
அண்ணாவிடமும் இதைச் சொல்லி அவர் மனதை மாற்ற முயன்றனர்.
7
எம்.ஜி.ஆரால் கட்சி அடைந்த பயனை அவர்களிடம் எடுத்துக்கூறிய அண்ணா அதை அப்படியே விட்டுவிடும்படி கேட்டுக்கொண்டார்.
11