text
stringlengths 1
43.3k
| words
int64 1
4.33k
|
---|---|
முதல்ல நீ டாக்டர்ட கூட்டிட்டு போ என்று கூறிவிட்டு சென்றார்.
| 8 |
மகிழ்ச்சியில் துள்ளி குதித்து கொண்டிருந்தவன் அவளருகில் அமர்ந்து ஹே மது.... நீ அம்மாவ ஆகப்போற டி.
| 12 |
செம ஹாப்பி டி.
| 3 |
ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் என அவளது நெற்றியில் முத்தம் வைத்தான்.
| 8 |
கண்களை மெதுவாக திறந்தவள் மீண்டும் மயக்கமுற்றாள்.
| 5 |
அவளது நிலைமையை உணர்ந்தவன் வேகமாக அவளை ஹாஸ்பிடல் கொண்டு வந்து சேர்ந்தான்.
| 9 |
அவளை உள்ளே டாக்டர் ஆராய இவன் பழைய நியாபங்களுக்கு சென்றான்.
| 8 |
தேவ் என்கிற ஆதிதேவ் ஊட்டியில் இரயில்வே ஸ்டேஷன் மாஸ்டராக பணிபுரிபவன்.
| 8 |
அவனது மனைவியாகிய மது என்கிற மதுபாலா கேத்தியில் உள்ள பிரபல இன்ஜினியரிங் கல்லூரியில் பேராசிரியர்.
| 11 |
ஆதிதேவ்விற்கு தங்கை சாதனா என்றால் கொள்ளை பிரியம்.
| 6 |
சாதனாவும் மதுபாலாவும் சிறு வயதில் இருந்தே தோழிகள்.
| 6 |
பருவ வயது வருகிற வரை அவளை அந்நியராக நினைத்த அவன் மனது அதன்பின் அவள் மேல் மையல் கொண்டது.
| 14 |
வயது ஏற ஏற அவள் மேல் இருந்த ஈர்ப்பு காதலாக மாற காதலை வெளிப்படுத்த அவள் படிப்பு முடியும் வரை காத்திருக்க முடிவு செய்தான்.
| 18 |
யூஜி முடித்ததும் தேவ் தன் காதலை சொல்ல மதுபாலாவும் சம்மதித்தாள்.
| 8 |
அதன்பிறகு அவள் மேற் படிப்பு படிக்க செல்ல சாதனாவிற்கு கோவையில் சொந்த தொழில் செய்யும் மாதவனுடன் கல்யாணம் நிச்சயம் செய்தனர்.
| 15 |
கல்யாணம் முடிந்தவுடன் தன் காதலை பெற்றோரிடம் கூற எரிமலையாக வெடித்தார்கள் இராஜியும் இராமனாதனும்.
| 10 |
இரு வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி இருவரும் திருமணம் புரிந்தனர்.
| 7 |
இதுவரை அவனது பெற்றோரும் உயிருக்கு உயிரான தங்கையும் எப்படி இருக்கிறார்கள் என அவனுக்கு தெரியாது.
| 11 |
அவன் திருமணம் பின் அனைவரும் கோவை சென்று விட்டனர் என்பதை மட்டுமே அறிவான்.
| 10 |
இங்க யாரு ஆதிதேவ் என கேட்ட செவிலியரின் குரல் மூலம் நிகழ்காலத்திற்கு வந்தான் ஆதி.
| 11 |
நான் தான் என அவன் எழ உங்க மனைவி ரொம்ப வீக்கா இருக்காங்க.
| 10 |
டிரிப்ஸ் போட்டு இருக்கோம்.
| 3 |
என கூறினார்.
| 2 |
நோ பிராப்ளம் என்றதும் அவர் சென்றுவிட தன் தாய் தந்தைக்கு விஷயத்தை சொல்ல போன் பண்ணினான்.
| 12 |
கால் அட்டெண்ட் செய்த இராமநாதன் ஹலோ என்றார்.
| 6 |
அப்பா.
| 1 |
நான் ஆ.... தி... ப்பா என சொல்ல சொல்ல கால் கட் ஆனது.
| 10 |
அவன் அவர்களை அழைப்பதும் அவர்கள் துண்டிப்பதும்... அதனால் மீண்டும் ஒரு முறை அவன் அழைக்க இந்த முறை இராஜி எடுத்தார்.
| 15 |
ம்மா.
| 1 |
ப்ளீஸ் கட் பண்ணிறாதீங்க..... முக்கியமான விஷயம் சொல்லனும் என்று கெஞ்சினான்.
| 8 |
மறுபக்கம் அமைதியாக இருக்க ம்மா நீங்க பாட்டி ஆகப்போறிங்க என்றான்.
| 8 |
கோபத்தில் கொதித்து கொண்டிருந்த அவர் மனதில் யாரோ பனிக்கட்டி வைத்தது போல் குளுமை அடைந்தது .
| 12 |
உண்மையா வாடா என கேட்க ஆமாம் மா.
| 6 |
இன்னைக்கு தான் தெரிஞ்சுது.
| 3 |
அதான் கூப்பிட்டேன் என்று மகிழ்ச்சியில் கூறினான்.
| 5 |
ரொம்ப சந்தோஷம் பா.
| 3 |
மது எங்க அவளுக்கு டிரிப்ஸ் ஏத்துது.
| 5 |
என்றான்.
| 1 |
அவங்க வீட்டிலையும் சொல்லுங்க.
| 3 |
நாங்க நாளைக்கே ஊட்டி வரோம் என அழைப்பை துண்டித்தார்.
| 7 |
அவரை பார்த்து கொண்டிருந்த இராமநாதனை கண்டவள் ஏங்க அப்படி பாக்கிறிங்க.
| 8 |
நாம எவ்ளோ நாள் பேரக்குழந்தை இல்லன்னு அழுதிருப்போம்.
| 6 |
நம்ம சாதனாக்கு தான் குடுப்பனை இல்லை.
| 5 |
வேண்டாத கோயில் இல்லை.
| 3 |
கும்பிடாத சாமி இல்லை.
| 3 |
அவளுக்கு தான் குழந்தை பாக்கியம் இல்லை னு சொல்லிடாங்களே என கலங்கிய கண்களை முந்தானையால் துடைத்தவர்.
| 12 |
கடவுளே பார்த்து நமக்கு இந்த செல்வத்தை கொடுத்திருக்கார்.
| 6 |
நாம போலாம் என்று அவரை சமாதானப்படுத்தினார்.
| 5 |
அடுத்த நாள் காலை இரு வீட்டு பெரியவர்களும் ஊட்டி வர வீடு பழைய சந்தோஷத்துடன் இருந்தது.
| 12 |
மதுபாலாவும் ஆதிதேவ்வும் சந்தோஷத்தில் திளைத்தனர்.
| 4 |
தேவ் என பெண் குரல் கேட்க சாது என கத்தியவன் கண்களில் கண்ணீர் வந்தது.
| 11 |
ஒவ்வொரு துளி கண்ணீரும் அவள் மீதிருந்த பாசத்தை காமிக்க அதை துடைத்தவன் எப்படி டா இருக்க என்று நலம் விசாரித்தான்.
| 15 |
ம்ம்.
| 1 |
நல்லா இருக்கேன்.
| 2 |
சாரி டா.
| 2 |
இதன் வீட்டுக்காரர் அப்பா அம்மா உங்கிட்ட பேசற வரைக்கும் என்னையும் பேச வேணாம் சொல்டாங்க என மன்னிப்பு கேட்க பரவாயில்லை சாது என்றான்.
| 17 |
ஆமா நீ ஏன் எங்கிட்ட உன் காதலை சொல்லல.
| 7 |
என கற்பிக்க அவளே என்கிட்ட லேட்டா தான் சொன்னா.
| 7 |
அப்புறம் எப்படி சொல்ல என வருத்தப்பட்டான்.
| 5 |
ஆமா.
| 1 |
சரியான அழுத்தக்காரி.
| 2 |
அவகிட்ட போன் கொடு என்றாள்.
| 4 |
அவளை பற்றி அன்னையிடம் இருந்து கேட்டறிந்தவன் தப்பி தவறி கூட குழந்தை பற்றி கேட்கவில்லை.
| 11 |
அவள் மதுவுடன் பேச அனைவரும் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.
| 6 |
நாட்கள் வேகமாக ஓட மூன்றாம் மாதத்தில் மது வயிற்றில் இரட்டை குழந்தைகள் வளர்க்கிறார்கள் என தெரிய வந்தது.
| 13 |
இரட்டிப்பு மகிழ்ச்சியில் அனைவரும் இருக்க நாட்கள் வேகமாக உருண்டு ஓடியது.
| 8 |
வளைகாப்பு நாளும் வர ஒவ்வொரு வராய் மஞ்சள் சந்தனம் குங்குமம் பூசி பரிசு பொருள் ஒன்றுகொடுத்தும் அவளை வாழ்த்தினர்.
| 14 |
சாதனா முறை வர பலர் வேண்டாம் என சொல்ல மதுபாலா பிடிவாதத்துடன் அவளை நலுங்கு செய்ய வைத்தாள்.
| 13 |
தோழியின் அன்பில் கண்கள் கலங்க மதுவை பார்த்தாள் சாதனா.
| 7 |
என்ன கிப்ட் வேணும் சொல்லுடி என அவள் கன்னம் பற்றி கேட்க நான் கேட்டா கண்டிப்பா நீ செய்யனும் .
| 15 |
கண்டிப்பா.
| 1 |
சொல்லு என சாதனா வாக்குறுதி தர டெலிவரி அப்போ கேட்கிறேன்.
| 8 |
நீயும் அண்ணாவும் செய்யனும் என எதிர்ப்பார்புடன் கேட்டாள்.
| 6 |
ம்ம்.
| 1 |
என அவள் தலையாட்டி செல்ல மனைவி என்ன கேட்க போகிறாள் என்பதை ஊகித்த ஆதி அவளை நினைத்து பெருமிதம் கொண்டான்.கண்களாலிலேயே அவளிடம் கவிதை வாசித்தான் தேவ்.
| 19 |
டெலிவரி நாளும் வர மதுபாலாவை ஹாஸ்பிடலில் சேர்த்தனர்.
| 6 |
அனைவரும் ஊட்டி ஹாஸ்பிடலில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தனர்.
| 7 |
அறை மணி நேரத்தில் குழந்தைகளின் அழகை குரல் கேட்க அனைவரும் மகிழ்ந்தனர்.
| 9 |
ஆதிதேவ் மதுபாலா விற்கு அழகான ஒரு பெண் குழந்தையும் ஓர் ஆண் குழந்தையும் பிறந்தது.
| 11 |
அவள் அருகில் வந்த ஆதிதேவ் தேங்கஸ் டி என் செல்ல பெண்டாட்டி என முன் நெற்றியில் முத்தம் வைத்தான்.
| 14 |
புன்னகைத்தவள் தொட்டிலில் ஆடிய குழந்தைகளை பார்த்தாள்.
| 5 |
இரண்டு செல்வங்களும் கை கால்களை உதைத்து கொண்டிருந்தனர்.
| 6 |
அவளுடைய தாய் இரண்டு குழந்தைகளையும் தூக்கி அவளருகில் வந்து காண்பித்தார்.
| 8 |
ஆண் குழந்தையை வாங்கியவள் முடியை ஒதுக்கிவிட்டு நெற்றியில் முத்தம் வைத்தாள்.
| 8 |
ஆதி அவளது தோள்களை அழுத்தி பற்ற அவள் சாது என்றாள்.
| 8 |
அந்த இடத்தில் தனக்கு இந்த குடுப்பனை இல்லியே என கலங்கியபடி நின்றிருந்தவள் மதுபாலாவின் குரல் கேட்டு முன் வந்தாள்.
| 14 |
அன்னைக்கு கிப்ட் என்ன வேணும்னு கேட்டியே.
| 5 |
இப்போ கேட்கவா என்றாள்.
| 3 |
சொல்லுடி என அவள் உந்த என் வயிற்றில் உதித்த இந்த ஜீவன் இனி மாதவன் சாதனா பிள்ளையாக வளருனும் என்று கைகளில் இருந்து குழந்தையை அவள் முன் நீட்டினாள்.
| 21 |
அங்கிருந்த அனைவரும் அதிர சாதனா கண்கள் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது.
| 9 |
தடுமாறி கீழே விழ போனவளை மாதவன் தாங்க இவன பெத்தது வேணா நானா இருக்கலாம்.
| 11 |
ஆனா இவன் உன் பிள்ளைடி.
| 4 |
நீ தான் இனி இவனுக்கு எல்லாமே.
| 5 |
உனக்குஇந நியாபகம் இருக்கா நாம காலேஜ் படிக்கும்போ உனக்கு பையனும் எனக்கு பெண்ணும் வேணும்னு சொல்லிப்போமே...... அதான்டி..... அவனுக்கு நீ தான் இனிமே யசோதை.
| 18 |
நான் தேவகி மட்டுமே.
| 3 |
என்றாள்.
| 1 |
பாலா என அவளது பெற்றோர் கத்த ப்ளீஸ்.
| 6 |
யாரும் எதுவும் சொல்லிடாதீங்க.
| 3 |
எனக்கு இப்படி ஒரு அன்பான கணவன் அழகான குடும்பம் கிடைக்க முதன் முதல் காரணம் அவளிடம் கிடைத்த நட்பு.
| 14 |
அதுக்கு நான் திருப்பி ஏதாவது செய்யனும் தோணுச்சு அதான்.
| 7 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.